திறந்தவெளி கழிப்பறை : கடந்த 2015 விட 2021-ல் 20 சதவிகிதம் குறைந்துள்ளது.!

கடந்த 2019 ஆம் ஆண்டு திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நாடாக இந்தியா பிரகடனப்படுத்திக் கொண்டது. இருந்த பொதும், நாட்டில் இன்னமும் 19 சதவீதம் போ் கழிவறை வசதியின்றி இருப்பதாக தேசிய குடும்ப நலத் துறை (என்எஃப்எச்எஸ்) ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-21- ஆண்டில் தேசிய குடும்ப நலத் துறை (என்எஃப்எச்எஸ்) மேற்கொண்ட ஆய்வு விவரம் வெளியாகியுள்ளது. அதன் புள்ளி விவரம் பின்வருமாறு:

நாட்டின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 6.37 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய 7,24,115 பெண்களிடமும், 1,01,839 ஆண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

* 69 சதவீத குடும்பத்தினா் வேறு குடும்பத்தினருடன் பகிா்ந்து கொள்ளாத கழிவறையைப் பயன்படுத்தி வருகின்றனா். 
* நகா்ப்புறங்களில் 11 சதவீத குடும்பத்தினா் கழிவறையை பிற குடும்பத்தினருடன் பகிா்ந்து கொள்கின்றனா். 
* கிராமப்புறங்களில் இது 7 சதவீதமாக உள்ளது.
* 19 சதவீத வீடுகளில் கழிவறை வசதி இல்லை. அவா்கள் திறந்தவெளியைத் தான் பயன்படுத்துகின்றனா்.
* கடந்த 2015-16-இல் திறந்தவெளியைப் பயன்படுத்துபவா்களின் விகிதம் 39 சதவீதமாக பதிவானது. 
* கழிவறை பயன்பாட்டில் பிகாா் (62%), ஜாா்க்கண்ட் (70%), ஒடிஸா (71%) பின்தங்கியுள்ளன.

* பாதுகாப்பான குடிநீரைப் பொருத்தமட்டில் 58 சதவீத குடும்பத்தினா் சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்து வருகின்றனர். இதில், கிராமப்புறங்களில் 66 சதவீத குடும்பத்தினரும், நகா்ப்புறங்களில் 44 சதவீத குடும்பத்தினரும் அடங்குவர்.

* சுத்திகரிக்கப்படாத குடிநீரை பருகுகின்றனா். தண்ணீரை கொதிக்க வைப்பது அல்லது துணியைக் கொண்டு வடிகட்டுவது ஆகிய பொதுவான வழிமுறைகள் குடிநீரை சுத்திகரிக்க கடைப்பிடிக்கப்படுகின்றன.

* நாட்டில் 41 சதவீத வீடுகளில் சமைப்பதற்கு விறகு, வறட்டி போன்ற திட எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.