நவ்நீத் ராணாவை ஸ்கேன் எடுத்த போது படம் பிடித்த நபர் மீது வழக்கு

நடிகை நவ்நீத் ராணாவை எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கும்போது படம் பிடித்த அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அமராவதி தொகுதி எம்பியான நடிகை நவ்நீத் ராணா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமான் சாலீசா ஓத முயற்சித்த போது கணவரான எம்.எல்.ஏ ரவி ராணாவுடன் கைது செய்யப்பட்டார். 12 நாட்கள் சிறையில் இருந்து அண்மையில் ஜாமீன் பெற்று விடுதலையானார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அப்போது எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்தபோது அவரை யாரோ படம் எடுத்ததாக புகார் அளித்துள்ளார்.இதையடுத்து மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.