நாடு முழுவதும் ஊரடங்கு… வடகொரிய அதிபர் அதிரடி நடவடிக்கை!

உலக நாடுகள் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தன. பொதுமுடக்கம், தடு்ப்பூசி போன்ற தொடர் நடவடிக்கைகளால் உலக அளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய பூதம் கிளம்பியதை போல, இதுநாள்வரை தங்களது நாட்டில் கொரோனா தொற்று இல்லவே இல்லை என்று மறுத்து வந்த
வடகொரியா
, முதன்முறையாக, தங்கள் நாட்டு பிரஜை ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

‘நாட்டில் ஓமைக்ரான் வைரஸ் சப்தமின்றி நாட்டுக்குள் நுழைந்துள்ளது. அதனை ஆரம்ப நிலையிலேயே நிலைகுலைய செய்ய வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் தேசிய அவசரநிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும்
ஊரடங்கு
அறிவிக்கப்படுகிறது.

அதிபருக்கு பெருமூளை நோய்… நாட்டு மக்கள் அதிர்ச்சி!

இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து ககவுகளும் அடைக்கப்படுகின்றன. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்; அதற்காக ஒருவர் தொற்று ஏற்பட்ட காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்க வேண்டுமா என்ற கேள்வி வடகொரிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.