பிரதமர் மோடி நேபாளம் பயணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-‘நேபாளத்தின் லும்பினி நகரில், 16ல் நடக்கும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்’ என, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

latest tamil news

இதுகுறித்து, வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர் ஷெர் பகதுார் தியூபா விடுத்துள்ள அழைப்பின்படி, லும்பினியில் உள்ள புத்தர் கோவிலில், 16ம் தேதி நடக் கும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.

latest tamil news

பின், அங்குள்ள புனித மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்கிறார். கடந்த 2014ல் இருந்து, பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நேபாளத்துக்கு செல்கிறார். இவ்வாறு அது கூறிஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.