மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் 17 பேர் வெளிநாடு செல்ல இலங்கையின் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகக்கோரி கடந்த திங்கட்கிழமை அன்று அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

latest tamil news

இதனை விசாரித்த நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே, நாமல் ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜெயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுகா பெரேரா, சனத் நிஷாந்த, அமித் அபேவிக்ரம, புஷ்பலால், மகிந்த கஹந்தகம, திலித் பெர்னாண்டோ, தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.