8ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. உடன்படிக்கும் மாணவர்களால் நேர்ந்த கொடூரம்..!

8ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு மூன்று மகள் உள்ளனர். அவர்களின் மூத்த மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் மாணவர்கள் நால்வர் அந்த மாணவியுடன் சேர்ந்து அவருடன் சேர்ந்து படித்து வந்தனர்.

இந்நிலையில், சம்பவதன்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லாததை கண்ட அவர்கள் கதவை அடைத்து விட்டு அந்த மாணவியை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால், பயந்து போன அந்த சிறுமி கத்தியுள்ளார்.

அப்போது, இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார். பயந்து போன சிறுமி யாரிடமும் இதுப்பற்றி கூறவில்லை. அந்த சிறுமியின் தங்கைக்கு தெரிந்த நிலையில் அவரது தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 4 சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.