“இந்தியா-இலங்கை இடையிலான உறவு இன்னும் சிறப்பாக இருக்கும்!" – புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, நேற்றைய தினம் அந்த நாட்டின் புதிய பிரதமராக… 6-வது முறையாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

ரணில் விக்ரமசிங்க – கோத்தபய

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கையின் பிரதமராக மிக இக்கட்டான சூழலில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற கையோடு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, “இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எங்களிடம் பொருளாதார செயல் திட்டம் இருக்கிறது. நான் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவேன். எங்கள் அரசாங்கத்தின் கீழ் இலங்கை-இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தியா- இலங்கை உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.