இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 17ல் விவாதம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, வரும் 17 ஆம் தேதி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி உள்ள அந்நாட்டில், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது.

இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர்
கோத்தபய ராஜபக்சே
மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் குற்றச்சாட்டின. மேலும், ஆட்சியில் இருந்து ராஜபக்சே குடும்பம் விலக வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். தொடர்ந்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, இலங்கையின் புதிய பிரதமராக, ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே: இலங்கை நெருக்கடி தீருமா?

இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்திருந்தது. இந்த தீர்மானம் மீது, வரும் 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்பு ஒப்புதல் பெற்று இந்த தீர்மானம் மீது விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.