ஊரடங்கு உத்தரவு: சனி மாலை 6 முதல் ஞாயிறு அதிகாலை 5 மணி வரை

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

மீண்டும் நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (14) அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் ,அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.