`கண்ணான கண்ணே' பாடலால் தொடங்கிய காதல் இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடந்த அஜய் கிருஷ்ணா- ஜெஸி திருமணம்!

`சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் அஜய் கிருஷ்ணா. பின்னணிப் பாடகராக தற்போது பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும், ஜெஸி என்பவருக்கும் இன்று பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வேலைகள் முழுவதையும் ஆசை, ஆசையாக இருவருமே கவனித்து சிறப்பாக தங்களுடைய திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அஜய் – ஜெஸி

மூன்று அக்காக்களின் பராமரிப்பில் வளர்ந்தவர் அஜய் கிருஷ்ணா. ‘கண்ணான கண்ணே’ பாடலை அஜய் பாடின வீடியோவை பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்திருக்கிறார் ஜெஸி. நட்பாக பேச ஆரம்பித்தவர்களுக்கிடையில் காதல் மலர்ந்திருக்கிறது. இருவருடைய வீட்டிலும் தங்களுடைய காதலை தெரிவித்து சம்மதமும் வாங்கியிருக்கிறார்கள்.

இது குறித்து அஜய் கிருஷ்ணா நம்மிடையே பேசும்போது, ‘ என் அக்காக்கள் என்னை ரொம்ப அன்பா பார்த்துப்பாங்க.. அதே மாதிரி, ஜெஸியும் என்னை கவனிச்சிக்கிறாங்க. எங்க அக்காக்களுக்கு நீளமான முடி இருக்கும்… இப்ப நீளம் எல்லாம் குறைஞ்சிடுச்சு. ஆனா, அவங்களுக்கு எனக்கு வர்ற மனைவிக்கு நீளமான முடி இருக்கணும்னு ஆசை இருந்துச்சு. எனக்கும் அந்த ஆசை இருந்துச்சு. ஜெஸிக்கு ரொம்பவே நீளமான முடி. அதுவும் அவங்ககிட்ட எனக்கு ரொம்பவே பிடிச்சது!’ எனக் கூறியிருந்தார்.

அஜய் – ஜெஸி

நெருங்கிய சொந்தங்களுடன் எளிமையான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்று நடைபெற்றுள்ள அவர்களுடைய திருமண நிகழ்வில் மீடியா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் கிருஷ்ணா இந்து, ஜெஸி கிறிஸ்டியன் என்பதால் இரு மத முறைப்படியும் அவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது.

வாழ்த்துகள் அஜய் – ஜெஸி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.