ஞானவாபி மசூதி வழக்கு விவகாரம்: உயிர் பாதுகாப்பு குறித்து நீதிபதி அலறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாரணாசி : வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்துக்குள், ‘வீடியோ’ பதிவுடன் கள ஆய்வு மேற்கொள்ள, உத்தரவு பிறப்பித்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் தனது உயிர் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் அச்சப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துஉள்ளது. இந்த அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

latest tamil news

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிக்குமார் திவாகர், ஞானவாபி மசூதி வளாகம் முழுதும், வரும் 17 ம் தேதிக்குள் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆய்வுக் குழு தலைவர் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதி ரவிக்குமார் திவாகர் கூறியது, ஞானவாபி விவகாரத்தால்,தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் வருகிறது. நான் தினம் தினம் வெளியே செல்லும் எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது உயிர் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை அடைகின்றனர். சம்பந்தப்பட்ட மசூதி வளாகத்தினை நேரில் ஆய்வு செய்ய போகிறேன் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதை பார்த்த எனது தாயார் அங்கு செல்ல வேண்டாம் என கூறுகிறார். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.