தாலிகட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்: காரணம் என்ன?

ஆந்திராவில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த மதுரவாடா பகுதியில் மதுரவாடா தெலுங்கு தேசம் இளைஞர் அணி தலைவரான சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்பவருக்கும் திருமணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஆந்திர முறைப்படி மணமகள் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான சீரகம் வைபவம் என்னும் சடங்கு நடந்து கொண்டிருந்தது.
image
அப்போது தாலி கட்டுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு திடீரென்று மணமகள் ஸ்ருஜனா, மணமகன் சிவாஜி மடியில் மயங்கி விழுந்தார். உடனடியாக திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து மணமகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
image
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனையில் மணமகள் விஷம் அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாலி கட்டுவதற்கு முன்பாக மணமகன் மடியிலேயே மணமகள் உயிரிழந்த சோகம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.