திருப்பத்தூரில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை தேடி வரும் போலீசார்..!

திருப்பத்தூர் அருகே, சாலையில் முந்தி செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாதிக் அலி என்பவர் குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.

அப்போது கரியம்பட்டி வழியாக வந்த அரசு பேருந்துக்கு அவர் வழி விடாமல் நின்றதால், அவருக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்தை பின் தொடர்ந்து சென்ற சாதிக் அலி, தனது ஆதரவாளர்களை வரவழைத்து, பேருந்து ஓட்டுனர் பெரியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு பெரியசாமி தப்பி ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.