திருமணமான ஏழே மாதத்தில் இளாம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

திருமாண 7 மாதத்தில் செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், பண்டாரவாடை திருமாளம் நோக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவருக்கு கோபிநாத் என்பவருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தநிலையில், வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனால்,கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவதன்று கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொள்ள முயற்சித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.