பணி செய்யும் பெண்கள் எண்ணிக்கை குறைகிறது!| Dinamalar

புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும் இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து விலகி உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பெண்களின் சமூக நிலை குறித்து அறிவதற்காக, ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 6.37 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில், பெண்கள் கருவுறும் விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் கருவுறுவது பெருமளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி பெண்கள் தங்கள் பணிகளில் இருந்து விலகி இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘இந்நிலை தொடர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அடுத்த 20 ஆண்டுகளில் உழைக்கும் வயதினர் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி அடையும்’ என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.