பாஜகவின் தவறான கொள்கையால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் : சோனியா காந்தி

தயப்பூர்

பாஜகவின் தவறான கொள்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாடு நடந்து வருகிறது.  வரும் மே 15ம் தேதி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேரு உரையாற்ற உள்ளார் .  இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உரையாற்றி உள்ளார்.

சோனியா காந்தி தனது உரையில்,

”மத்திய பாஜக அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.    நாட்டில் ஜனநாயகத்துக்குக் குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர்.  மோடியும், அவரைச் சார்ந்தவர்களும் அதிகபட்ச ஆளுமை, குறைந்தபட்ச அரசு என்ற கோஷத்தை முன்வைத்துள்ளனர் 

அனைத்து தரப்பினரிடையே வெறுப்பு பேச்சுக்களை பாஜக அரசு பரப்பி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களிடையே அச்சத்தைப் பரப்பி வருகிறது   தனது கொள்கை மூலம் பாஜக அரசு சாமானிய மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்திப் பிளவுபடுத்த முயற்சி செய்கிறது”

என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.