பேச்சு நடத்தும் சூழலில் பாக்., இல்லை: வெளியுறவுத்துறை அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்-‘இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சை நடத்தும் சூழல் தற்போது இல்லை’ என, பாக்., வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

latest tamil news

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவி ஏற்றவுடன், ‘இந்தியாவுடனான நல்லுறவை பாக்., விரும்புகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை,நீடித்த அமைதி சாத்தியமில்லை’ என தெரிவித்தார். இதற்கிடையே, டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், வர்த்தக அதிகாரியை பாக்., அரசு நியமித்துள்ளது.

latest tamil news

இதையடுத்து, இந்தியா -பாக்., இடையிலான வர்த்தக உறவு மேம்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அசிம் இப்திக்கர் நேற்று கூறுகையில், ”இந்தியாவுடனான பிரச்னைக்கு, சுமுக தீர்வு காண வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பேச்சு நடத்தும் சூழல் தற்போது இல்லை,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.