முன்னாள் கணவன்… முன்னாள் காதலன்…. இந்த சீரியல்களுக்கு இடையில் இவ்வளவு ஒற்றுமையா?

Tamil Serial Rating Raja rani 2 Naam Iruvar Namakku Iruvar 2: தமிழில் சீரியல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சன்டிவி மற்றும் விஜய் டிவி தான். இதில் விஜய் டிவியில் வரும் பெரும்பாலான சீரியல்கள் தமிழில் ஹிட்டான திரைப்படங்களின் டைட்டிலை பயன்படுத்தி ஹிட் செய்துள்ளனர். இந்த வகையில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வருவது ராஜா ராணி சீசன் 2.

அனைத்து சீரியல்களும் ஒரே மாதிரியான கதையில் இருந்தாலும் தீரைக்கதையில் சற்று வேறுபடுகின்றன. அந்த வகையில் ராஜா ராணி சீரியல் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுடன் நடப்பு எபிசோடுகள் ஒத்துபோகிறது.

ராஜா ராணி 2

ஒரு வீட்டில் சந்தியா அர்ச்சான என்ற இரு மருமகள்கள் உள்ளனர் இதில் சந்தியா மாமியார் குடும்த்தை முன்னேற்றவும், அர்ச்சனா மாமியார் குடும்பத்தை கெடுக்கவும் முயற்சிக்கின்றனர். இதில் சமீபத்தில் இவர்கள்ன நாத்தனார் பார்வதியின் திருமண எபிசோடுகள் அரங்கேறியது. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அர்ச்சான பார்வதியின் முன்னாள் காதலன் விக்கியுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார்.

இந்த திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற சந்தியா அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக முடித்து திருமணத்தையும் நடத்திவிட்டார். இப்போது பார்வதியை மிரட்டிய விக்கி ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் அவனது அப்பா அர்ச்சானவை மிரட்டுகிறார். அதே சமயம் பார்வதியின் அண்ணன் சரவணனின் கடையில் தனது ஆள் ஒருவரை வைத்து பார்வதியை கடத்தி விடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர் 2

இந்த சீரியலில் முதல் கணவர் முத்தரசு விடம் இருந்து தப்பித்துவிட்டதாக நினைக்கும் ஐஸ்வர்யா அந்த வழக்ககை விசாரிக்க வரும் போலீசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தின் போது, முன்னாள் கணவர் முத்தரசு சடனாக எண்ட்ரி கொடுக்க அனைவரும் அதிர்ந்துவிடுகின்றனர். ஆனால் ஐஸ்வர்யாவின் அண்ணன் மாயன் சாமார்த்தியமாக பேசி திருமணத்தை நடத்தி விடுகிறார்.

திருமணம் முடிந்தும் முத்துராசுவின் தொல்லை அதிகரிக்க இப்போது ஐஸ்வர்யாவின் கணவரை கத்தியால் குத்த போக குறுக்கே ஐஸ்வர்யா வந்து குத்து வாங்கி கொள்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஒற்றுமை என்ன?

இந்த இரண்டு சீரியலுக்கும் இடையே தற்போது பெரிய ஒற்றுமை உள்ளது. முதலில் ராஜா ராணி சீரியலில் பார்வதி ஒருவனை காதலிக்கிறாள். ஆனால் அவன் கெட்டவன் என்று தெரிந்தவுடன் அவனை விட்டு விலகி விடுகிறாள். ஆனால் அவன் பார்வதியை விடுவதாக இல்லை.

அதன்பிறகு பார்வதிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த பக்கம் முன்னாள் காதலன் விக்கி பார்வதியை மிரட்ட தொடங்குகிறார். அண்ணி சந்தியா பார்வதியை காப்பாற்ற நினைக்கிறார். 2-வது அண்ணி அர்ச்சனா பார்வதி திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்.

ஆனால் சதித்திட்டங்களை எல்லாம் முறியடித்து ஒரு வழியாக பார்வதியின் திருமணம் முடிந்து இப்போது அவர்கள் தாய் வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்கு வருகிறார்கள். அப்போது ஐஸ்வர்யா கடத்தப்படுகிறார்.

அதேபோல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஐஸ்வர்யா முத்துராசுவை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் அவனது கொடுமை தாங்க முடியாமல் இருக்க, முத்துராசுவை யாரோ சுட்டுவிடுகிறார். அதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு விடுதலை கிடைக்கிறது.

அதன்பிறகு போலீசை காதலித்து திருமணம் செய்யும்போது தாலி கட்டும் சமயத்தில் முத்துராசு எண்ட்ரி. ஆனாலும் மாயன் திருமணத்தை முடித்து விடுகிறார். இந்த திருமணத்தில் ஐஸ்வர்யாவின் மற்றொரு அண்ணன் மாறன் திருமணத்தை நிறுத்த நினைக்கிறார். இப்போது ஐஸ்வர்யா முத்துராசுவிடம் கத்திகுத்து வாங்கி உயிருக்கு போராடுகிறார்.

இந்த இரண்டு சீரியல்களும் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனில் உள்ளது. ராஜா ராணி சீரியலில் அண்ணி வில்லி என்றால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அண்ணன் வில்லன். இந்த சீரியலில் கடத்தல் அந்த சீரியலில் கத்தி குத்து. இதில் முன்னாள் காதலன். அதில் முன்னாள் கணவன். இரண்டுபேருமே திருமணத்தின்போது எண்ட்ரி என பல ஒற்றுமைகள் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.