ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழு ஆதரவு – மகிந்த கட்சி அறிவிப்பு


புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கட்சியின் சுதந்திரத்தை பாதுகாத்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழு ஆதரவு - மகிந்த கட்சி அறிவிப்பு

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது.

இதனால் கடந்த 9ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.

இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழு ஆதரவு - மகிந்த கட்சி அறிவிப்பு

இதனிடையே, விரைவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போவதில்லையென பிரதான எதிர்க்கட்சி உள்ளட்ட முக்கிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைச்சரவை விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.      

You My Like This Video 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.