இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தை தாண்டியது.

அதே போல், பாதிப்பும் 4 கோடியாக அதிகரித்துள்ளது .

இன்று (14) காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

:* புதிதாக 2ஆயிரத்து,858 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4கோடி,31இலட்சத்து,19ஆயிரத்து,112 -ஆக உயர்ந்தது.

* புதிதாக 11 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்து,24ஆயிரத்து,201-ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3ஆயிரத்து,355 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4கோடி,25இலட்சத்து,76ஆயிரத்து,815 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18ஆயிரத்து,096 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில் 1,91,15,90,370 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,04,734 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.