குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குன்றத்தூரில் தோல் தொழிற்சாலை அதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசாத் (42), அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். 
image
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். இதில், வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து 100 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
image
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.