கேரளாவில் தப்பித்து  திருப்பூர் ரயில்வே போலீசில் சிக்கிய கைதி

கேரளா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தப்பிவந்த குற்றவாளியை திருப்பூர் ரயில்வே போலீசார் கையும் களவுமாக பிடித்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஷினாய், அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார் இதில். பலத்த காயமடைந்த அவர், பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
image
இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறையில் இருந்து தப்பித்த ஷினாய், கேரளாவில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறி தப்பித்துள்ளார். இதனை அறிந்த குழல்மண்ணம் போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர்.
image
இதைத் தொடர்ந்து  ரயில் திருப்பூர் ரயில் நிலையம் வந்தபோது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார், அவரை கைது செய்து இதுகுறித்து கேரளா மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்துச் சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.