கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் 2 நண்பர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கரியன்குட்டையைச் சேர்ந்த வெள்ளிங்கிரி -சசிகலா தம்பதியினரின் 17 வயதான மகள் கடந்த 9ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் நண்பர்கள் உதவியுடன் அந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.