ஐபிஎல் : லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை, 
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. 
நேற்று நடைபெற்றஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார் ,பின்னர் வந்த கேப்டன் சாம்சன் ஜெஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் .
ஒரு சில பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு விரட்டிய இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்து பொறுப்புடன் ஆடினர். சாம்சன் 32 ரன்களில் வெளியேறினார் .பின்னர் படிக்கல் களமிறங்கினார் .அதன்பிறகு ஜெய்ஸ்வால் 41 ரன்களிலும்  ,தேவ்தத் படிக்கல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178  ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் .தொடர்ந்து 179 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் ,டி காக்  களமிறங்கினர் .முதல் ஓவரில் டிகாக் 7  ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஆயுஷ் படோனி ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார் பின்னர் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார் .
அடுத்து வந்த தீபக் ஹூடா, குருனால் பாண்டியா சிறப்பாக விளையாடினர் ,இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தனர்.குருனல் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார் .
மறுபுறம் அதிரடியாக  விளையாடிய ஹூடா அரைசதம் அடித்தார் . தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் .பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் ,1 ரன்களிலும் ,சமீரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .கடைசியில் ஸ்டாய்னிஸ் போராடி 17 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .
இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது .இதனால்24  ரன்கள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான்வெற்றி பெற்றது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.