காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

உதய்பூர்:
காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், பிராந்தியங்களில் தொகுப்பு தான் இந்தியா. இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமான நாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி பாகுபாடின்றி அனைவரின் கருத்துகளையும் கேட்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.