தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வருகின்ற மே 18ஆம் தேதி தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் மன்னார் வளைகுடா, அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.