தமிழகத்தில் யாருக்கும் தக்காளி காய்ச்சல் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவாரூர்: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி காய்ச்சல் தாக்குதல் இல்லை என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஆதிச்சபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 67.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவியதாக வரும் தகவல்கள் வதந்திதான். இதுவரை தமிழகத்தில் யாருக்கும் தக்காளி காய்ச்சல் தாக்குதல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.