தமிழகத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்| Dinamalar

ரோம்: தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்தை சேர்த்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் இவர் ஆவார். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், குமரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிஷப்புகள், பங்கு தந்தைகள், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து

தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று கலாசார நிகழ்ச்சி நடந்தது. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, அருட்சகோதரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.