புதுக்கோட்டை: நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

திருமயம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரது மகன் தமிழ்ச்செல்வன். இவர், செங்கீரையில் உள்ள தனது தாய்மாமன் வீட்டில் தங்கி, ராயவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
image
இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் மட்டும் வீடு திரும்பாத நிலையில், அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிவந்தனர். இந்நிலையில் வீக் கோட்டையூரில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவனின் சடலம் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் திருமயம் காவல்துறையினர் மற்றும் திருமயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தது தமிழ்ச்செல்வன் தான் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து திருமயம் காவல்துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
image
இதுகுறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.