மனைவியின் கள்ளகாதலனை கொன்ற கணவன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கவசம் பட்டியை சேர்ந்தவர் ஆனந்தபாண்டி. இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் மாட்டு கொட்டகை ஒன்றில் பிணமாக தொங்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கட்ட விசாரணையில் அந்த மாட்டுகொட்டகையின் உரிமையாளர் மீது சந்தேகம் ஏற்பட்டது அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மணிகண்டன் ஆனந்த பாண்டியன் நண்பர்கள் ஆனந்தபாண்டி மணிகண்டன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார்.மணிகண்டனின் மனைவி செல்விக்கும் ஆனந்தப்பாண்டிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருந்த போது மணிகண்டன் திடீரென வந்து விட்டார்.

 அவர்களை கண்டு ஆத்திரமடைந்த அவர் ஆனந்த பாண்டியன் கடுமையாக தாக்கினார்.இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனவும் அதனால் மனைவியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து மாட்டு கொட்டகையில் பிணமாக தொங்க விட்டதாக தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரையும் அவரது மனைவியும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.