Tamil News Live Update: நீட் தேர்வு.. வரும் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

IPL 2022: குஜராத் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதேபோல், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி  பெற்றது. 179 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன.

கமல் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விக்ரம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Tamil news today live

நெல்லை கல்குவாரி விபத்து!

நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, நெல்லை கல் குவாரி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் முருகன், விஜய் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேற்று வழங்கினர்.

கல் குவாரி விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 5 வருடங்களுக்கு குவாரி செயல்பட 2018ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது – நெல்லையில், சபாநாயகர் அப்பாவு பேட்டி!

நெல்லை கல்குவாரி விபத்து.. 4 பேர் மீது வழக்கு!

நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது, 3 பிரிவுகளில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுால் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!

ஈரோடு, கரூர் உட்பட தமிழகம் முழுவதும், நுால் விலை உயர்வை கண்டித்தும், நூல் விலையை குறைக்க கோரியும் இன்றும், நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் கரூரில் மட்டும் ₨100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
08:44 (IST) 16 May 2022
நீட் தேர்வு.. வரும் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் நேற்று முடிவடைந்த நிலையில், 2வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுப்பட்டுள்ளது. அதன்படி வரும் 20 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

08:42 (IST) 16 May 2022
சென்னை பல்கலை,. பட்டமளிப்பு விழா!

சென்னை பல்கலைக்கழகத்தின் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.