ஆர்டிஇ மாணவர் சேர்க்கையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நடப்பு கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு  25 சதவீதம் இட ஓதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற  20 -ந் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரை இணையதளம் வழியாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25 சதவீதம் சேர்க்கைக்கு மே 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளையுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்..
சோதனையில் சி.பி.ஐ.க்கு எதுவும் கிடைக்கவில்லை- ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.