உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம்.!

உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எலும்புக் கூடுகளாக காட்சியளிக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் சின்னா பின்னமாகி விட்டன.

கிழக்கு உக்ரைனின் Sievierodonetsk நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உருக்குலைந்த உக்ரைன் Oleksandrivka நகரின் ட்ரோன் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.