சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது சென்னை அருகே பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுபாக்கத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதைத்தவிர, பாடி, அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள்.. தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு

இதையும் படியுங்கள்..
தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.