சொத்து தகராறில் நேர்ந்த விபரீதம்.. அண்ணனை கொலை செய்த தம்பி..!

சொத்து தகராற்றில் தம்பியை கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு. இவருக்கு  2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் ஜெகதீஷன் மற்றும் இளைய மகன் கோதண்டராமன்  இருவரும் தங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கோதண்டராமனுக்கு திருமணம் செய்து வைக்கமுடிவு செய்ததால் அவர்களின் நிலத்தை பிரிக்க முடிவு செய்துள்ளனர்.  இதனால், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவதன்று அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெகதீஷன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கோதண்டராமனை சுட்டுள்ளார்.  இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.