துப்பாக்கி முனையில் வாட்ச், செயின், செல்போன் திருட்டு.. தப்ப முயன்ற திருடர்களை காரால் மோதி போலீசிடம் சிக்க வைத்த வழக்கறிஞர்..!

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தனது உடைமைகளைத் திருடி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவர்களை அந்த வழக்கறிஞர் காரால் மோதி தள்ளிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஷியாவெனட்டோ என்ற அந்த வழக்கறிஞர் மேற்கூரை இறக்கப்பட்டிருந்த convertible ரக சொகுசு காரை சிக்னலில் நிறுத்திய போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அவர் அணிந்திருந்த ஏழே முக்கால் லட்ச ரூபாய் மதிப்பிலான கார்டியர் கைகடிகாரம், செயின் மற்றும் 2 செல்போன்களை பறித்தனர்.

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு பைக்கில் தப்ப முயன்றவர்களை ஷியாவெனட்டோ தனது காரால் மோதி கீழே தள்ளினார். அங்கிருந்து தப்பி செல்வதற்குள் போலீசார் அவர்களைப் பிடித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.