பிரித்தானியாவில் பரபரப்பு! பாலியல் பலாத்கார வழக்கில் எம்.பி. கைது


பிரித்தானியாவில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் அடையாளம் தெரியாத எம்.பி. கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதால் கன்சர்வேடிவ் கட்சிக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

செவ்வாயன்று, அக்கட்சி அந்த எம்.பி.யை நாடாளுமன்றத்தில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

50 வயதிற்குட்பட்ட அந்த எம்.பி. கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசாரணையில் இருப்பதால் அக்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் குரங்கம்மை; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் பரபரப்பு! பாலியல் பலாத்கார வழக்கில் எம்.பி. கைது

இது குறித்து கன்சர்வேடிவ் கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை முடிவடையும் வரை மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

அந்த நபர் இன்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநாகரீகமான தாக்குதல், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில், அந்த எம்.பி. கைது செய்யப்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: அமெரிக்க பள்ளியில் இந்திய வம்சாவளி மாணவர் அனுபவித்த கொடுமை! இணையத்தில் விமர்சனத்தை தூண்டிய வீடியோ 

பிரித்தானியாவில் பரபரப்பு! பாலியல் பலாத்கார வழக்கில் எம்.பி. கைது

முன்னதாக, கன்சர்வேடிவ் நாடாளுமன்றக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 65 வயதான பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் நீல் பாரிஷ், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஆபாசப்படத்தை பார்த்து பிடிபட்டதையடுத்து ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.

மற்றொரு கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் அகமது கானும் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சமீபத்தில் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.