பொதுச்சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.. உ.பி மாநில அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!

அமைச்சர்கள் பொதுச்சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் மாநில அமைச்சர்களுடன் பேசிய மோடி, அரசின் திட்டங்கள் சாமானிய மக்களை சென்றடைவதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

அனைத்து அமைச்சர்களும் பொதுச்சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மோடி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக உள்ளது என்றும் அதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.