ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு: `எத்தனை முறை… நானே மறந்துவிட்டேன்’ – கார்த்தி

காங்கிரஸ் எம்.பி-யும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் வீட்டில் திடீரென சி.பி.ஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்திவருகின்றனர். மொத்தமாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக 4 முறை ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. கடந்த 2019-ல் ப.சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றையும் சிபிஐ அனுப்பியிருந்தது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் INX மீடியா முறைகேடு தொடர்பாக வழக்கும் சி.பி.ஐ-யிடம் இருக்கிறது.

சிபிஐ

இருப்பினும் இதுவரை எந்த வழக்கின் கீழ் சிபிஐ சோதனை நடைபெறுகிறது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

ப.சிதம்பரம் மட்டுமல்லாமல், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சி.பி.ஐ சோதனை நடத்திவருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிபிஐ-யின் இந்த திடீர் சோதனை குறித்து, “எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்” என கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.