மகள்களை காப்பாற்ற சென்ற தாய்க்கு நேர்ந்த அவலம்.. தஞ்சை அருகே நடந்த சோகம்..!

மகளை காப்பாற்ற சென்ற தாய் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவருக்கு திருமணமாகி ஸ்டெல்லா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள தனது குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது இளைய் மகள் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

மூத்தமகள் வின்சி நீரில் மூழ்கிய தங்கையை காப்பாற்ற முயன்ற வேளையில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் கேட்டு வந்த அந்த பகுதி இளைஞர்கள் இரு பெண் குழந்தைகளையும் மீட்டனர்.

ஆனால், ஸ்டெல்லா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.