மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பினை ஒழிப்பதற்கான சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதாரவழிகாட்டி ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார்.

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதான நடவடிக்கை இன்று (17) இடம்பெற்றது.

கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றி, டெங்கு நுளம்பு பரவலில் இருந்து அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.