ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா.!

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 10 இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன.

இதன் எதிரொலியாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது.

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவு 6 சதவீதமாக அதிகரித்து, கடந்த ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரல்களாக உயர்ந்துள்ளது.

இது மே மாதம் 4 லட்சத்து 87 ஆயிரத்து 500 பேரல்களாக உயரும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் நாளொன்றுக்கு 66 ஆயிரம் பேரல்களே ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.