Elon Musk: எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் அனுப்பிய லீகல் நோட்டீஸ் – ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா?

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்து, அதிகம் பேசப்படுபவராக வலம் வருகிறார். தற்போது, இந்த ஒப்பந்தம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ட்விட்டரின் சட்டக் குழு தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாக
எலான் மஸ்க்
வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் போலி
ட்விட்டர்
கணக்குகள் மற்றும் போட்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தை மீறியதற்காக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மஸ்க் கூறியுள்ளார். முன்னதாக, ட்விட்டரை இந்திய மதிப்பில் சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் வாங்கினார்.

வெளிப்படுத்தாத ஒப்பந்தம் மீறப்பட்டதாக, ட்விட்டர் சட்டக் குழு புகார் அளித்ததாக தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தனது ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டரில் உள்ள போட்டுகள் களையப்படும் என்று அறிவித்திருந்தார்.

Starlink Broadband: 32 நாடுகளில் தடம் பதித்த ஸ்டார்லிங்க் – இந்தியாவுக்கு எப்போது?

போலி போட்டுகளை கண்டறியும் சோதனை

ட்விட்டரை பாதுகாப்பானதாக மாற்ற பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ஸ்பேமிற்கு ட்விட்டரில் இடமில்லை எனவும் கூறியிருந்தார். இதற்காக, 100 மாதிரி ஃபாலோயர்ஸுகளைக் கொண்டு போட்டுகளை கண்டறியும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையே விதிமீறல் என ட்விட்டர் சட்டக்குழு கணக்கிட்டுள்ளது. எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் போட்கள் அல்லது போலி கணக்குகளை களைவதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை குறித்து மிகவும் தெளிவாக இருக்கிறார்.

WhatsApp Update: இனி லிங்க் தகவல்களை தெளிவாகப் பார்க்கலாம்!

ட்விட்டர், தனது போலி, ஸ்பேம் கணக்குகளை ஒரே அளவில் கணக்கிடுகிறது. எனவே, மாதிரி அளவுகளைக் கொண்டு, ஸ்பேம் மற்றும் போட் கணக்குகளை வடிகட்டும் முயற்சியின் எலான் மஸ்க் இறங்கியுள்ளார்.

மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, இந்த நிறுவனம் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து, ட்விட்டரை வாங்கிய பிறகு பல பெரிய தலைகள் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டது. அதில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பராக் அகர்வாலின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ட்விட்டரின் அடுத்த CEO யார்?

ட்விட்டரின் அடுத்த தலைமை செயல் அலுவலர் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனிடையில்,
பராக் அகர்வால்
ஒரு ட்வீட்டில், நிறுவனம் சிறந்த எதிர்காலத்திற்காக தொடர்ந்து பணியாற்றும் என்று கூறியிருந்தார். இதையடுத்து இரண்டு நிர்வாகிகள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

Elon Musk Twitter: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ட்விட்டர் சிஇஓ!

ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. ஆனால் நிறுவனம் அல்லது மஸ்க் பின்வாங்கினால், அதற்காக ஒரு பில்லியன் டாலர் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது மட்டும் உலகறிந்த உண்மை.

மேலதிக செய்திகள்:

Google Pixel 6a: புதிய கூகுள் பிக்சல் போன் வெளியாகும் தேதி; சலுகைகள்!iPhone 15: வழிக்கு வந்த ஆப்பிள் – 2023’ல் டைப்-சி உறுதி!Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.