Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரம்.. ரணில் விக்ரமசிங்கே!
நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது- இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரை.
IPL 2022: டெல்லி அணி வெற்றி!
ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
Tamil News Latest Updates
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும். வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா!
பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்க உள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் மாதவன் நடிப்பில் உருவான ‘Rocketry’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் வீட்டில், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 344 உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 38,168 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,771-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்ற கணக்கு நினைவில் இல்லை. சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெறும் நிலையில் கார்த்தி சிதம்பரம் ட்வீட்!
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் மே 24 முதல் 29 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்பட 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 4 பேரில் 2 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து, ஜவுளி வியாபாரிகள் 2வது நாளாக இன்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஐடி சார்பாக 5ஜி தொழில்நுட்ப சோதனை திட்டத்தை, பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான கால அட்டவணை வெளியானது. மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.