அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மத்திய – மாநில அரசு திட்டங்களின் பலன்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.

திட்டங்களை தீட்டுவதை விட அதன் நோக்கம், பயன் சிதையாமல் நிறைவேற்றுவதே மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டப்படும் என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.