இந்த வயசுல கல்யாணமா பண்ணி வைக்க முடியும்?-முதியவரை கலாய்த்த ரோஜா!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இடம்பிடித்தார். இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, . ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து ‘வாசலுக்கு வாசல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.

தனது சொந்த தொகுதியான நகரிக்கு இன்று சென்ற
அமைச்சர் ரோஜா
, தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதியவர் ஒருவர், ‘இந்த வயதில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை’ என கோரிக்கையாக தெரிவித்தார்.

அதற்கு ”அரசு சார்பில் உங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வேண்டுமானால் பெற்றுத்தர முடியும். திருமணமா செய்து வைக்க முடியும்?” என்று ரோஜா நகைச்சுவையாக எடுத்துரைத்தார். முதியவருடன் ரோஜா உரையாடும் இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.