இலங்கைக்குத் தமிழக அரசின் சார்பில் உதவிப் பொருட்கள் அனுப்பி வைப்பு.!

இலங்கைக்கு 45 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், மருந்துகள் ஏற்றிச் செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

முதற்கட்டமாக இலங்கைக்கு ஒன்பதாயிரம் டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 24 டன் மருந்துப் பொருட்களைத் தமிழக அரசு அனுப்புகிறது.

இந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் சரக்குக் கப்பலைச் சென்னைத் துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.