ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை.!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அறிவியல் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.