ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.59.37 லட்சம் பணமோசடி.. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றம்..!

சென்னையில், ரயில்வே வேலை வாங்கித் தருவதாக கூறி 4 பேரிடம் 60 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ், பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்கராஜிடம் இருந்து பல்வேறு தவணைகளில் 13 லட்சம் ரூபாய் வரை சுரேஷ் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கி தரமால், தலைமறைவாகியதாக சொல்லப்படுகிறது. விசாரணையில், தங்கராஜ், ஸ்ரீநாத் உள்ளிட்ட 4 பேரிடம் 59 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றியது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.