வீட்டை உரிமைகோரிய தாய் மாமன்கள்..வீடியோ வெளியிட்டு இளைஞர் எடுத்த விபரீதமுடிவு..!

இட பிரச்சினை காரணமாக கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்ட தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தவிட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இளங்கோவன் வசித்து வந்த  வீட்டை அவரது தாய் மாமன்கள் மூவரும் உரிமை கோரியுள்ளனர் இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது தற்கொலைக்கு தாய்மாமன்கள் காரணம் எனவீடியோ பதிவு செய்து விட்டுவிட்டு தீக்குளித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.